அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

‘நபிமொழிகள்’ பிரிவின் பதிவுகள்

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 366 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-7

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

உங்களுக்குள் வேற்றுமை கொள்ளாதீர்கள்! அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் : “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.

பிரிவு: நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 337 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-6

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

பள்ளிவாசல்கள் கட்டுவதின் சிறப்பு! உஸ்மான் (ரலி) பள்ளியை விரிவுபடுத்திய போது ‘நீங்கள் மிகவும் விரிவுபடுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்” என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) கூறினார். அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் அல் கூலானி (ரலி), ஆதாரம் : புகாரி

பிரிவு: நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 320 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-5

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010

மார்க்க விஷயங்களில் எளிதாக நடந்து கொள்ளுங்கள்; மக்களை வெறுப்பேற்றாதீர்கள்! “(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றி விடாதீர்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம் : புகாரி.

பிரிவு: நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 134 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-4

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 11th April 2010

சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகள் யார்? நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை), ‘சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பிணவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வீன் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?

பிரிவு: நபிமொழிகள், முஹம்மது நபி  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 139 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th April 2010

எல்லா நற்செயல்களும் தர்மமே! ‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி. பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது கூட தர்மம் ஆகும்! ‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள்.

பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நபிமொழிகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 120 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-2

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th April 2010

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்: – அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்), ‘(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்’ என்று கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?’ என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன்.

பிரிவு: நபிமொழிகள், முஹம்மது நபி  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 105 views

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd April 2010

இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: – “மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நபிமொழிகள், பொதுவானவை  No Comments

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >